Singer : Vani Jairam and Balamuralikrishna

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Vada dhisaiyil sila vaigunthangal
Thiru madavan vaazhum thiru thalangal
Kadalenum bakthiyil uyirinangal
Dhinam kannanai seivikkum arul manangal

Female : Pandaripuramennum ponnulagam
Engal paranthaaman kanda thani ulagam
Pandaripuramennum ponnulagam
Engal paranthaaman kanda thani ulagam

Female : Kandu kondaar avar kangalilae
Avan karunai piranthathu idhayaththilae
Kandu kondaar avar kangalilae
Avan karunai piranthathu idhayaththilae

Male : Kannan pirantha siraisaalai
Aa…aa…aa…aa…aah….aa…aa…aa….
Kannan pirantha siraisaalai
Avan kaaviyam paadiya kulir cholai
Vannam nirainthathu sirikkuthammaa
Intha maduraa nagaram azhaikkuthammaa

Female : Kasi endraalae namai marappom
Antha harichandran kadhaithanai ninippom
Kasi endraalae namai marappom
Antha hairchandhiran kadhaithanai ninaippom

Female : Aasigal puriyuthu gangai nadhi
Antha alaiyinil moozhguvathu manithavithi
Aasigal puriyuthu gangai nadhi
Antha alaiyinil moozhguvathu manithavithi

Male : Gangaiyil orunaal kuliththuvittaal
Entha kaakkaiyum yaanaiyin palam perumaam
Angae avargal kuliththezhunthaar
Antha anantha layaththil thamai maranthaar

Female : Saththiya naarayanan koyil
Raman sannathi kaattum thirukkoyil
Aththanaiyum avar paarththa pinnae
Annai annapoorani viduvaalaa

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பாலமுரளிகிருஷ்ணா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : வடதிசையில் சில வைகுந்தங்கள்
திரு மாதவன் வாழும் திருத் தலங்கள்
கடலெனும் பக்தியில் உயிரினங்கள்
தினம் கண்ணனை செவிக்கும் அருள் மனங்கள்

பெண் : பண்டரிபுரமென்னும் பொன்னுலகம்
எங்கள் பரந்தாமன் கண்ட தனி உலகம்
பண்டரிபுரமென்னும் பொன்னுலகம்
எங்கள் பரந்தாமன் கண்ட தனி உலகம்

பெண் : கண்டு கொண்டார் அவர் கண்களிலே
அவன் கருணை பிறந்தது இதயத்திலே…
கண்டு கொண்டார் அவர் கண்களிலே
அவன் கருணை பிறந்தது இதயத்திலே…

ஆண் : கண்ணன் பிறந்த சிறைச்சாலை
ஆ…ஆ…ஆ….ஆ…..ஆஹ்….ஆ….ஆ….ஆ….
கண்ணன் பிறந்த சிறைச்சாலை
அவன் காவியம் பாடிய குளிர்ச்சோலை
வண்ணம் நிறைந்தது சிரிக்குதம்மா
இந்த மதுரா நகரம் அழைக்குதம்மா

பெண் : காசி என்றாலே நமை மறப்போம்
அந்த ஹரிச்சந்திரன் கதைதனை நினைப்போம்
காசி என்றாலே நமை மறப்போம்
அந்த ஹரிச்சந்திரன் கதைதனை நினைப்போம்

பெண் : ஆசிகள் புரியுது கங்கை நதி
அந்த அலையினில் மூழ்குவது மனிதவிதி…..
ஆசிகள் புரியுது கங்கை நதி
அந்த அலையினில் மூழ்குவது மனிதவிதி…..

ஆண் : கங்கையில் ஒருநாள் குளித்துவிட்டாள்
எந்தக் காக்கையும் யானையின் பலம் பெறுமாம்
அங்கே அவர்கள் குளித்தெழுந்தார்
அந்த ஆனந்த லயத்தில் தமை மறந்தார்…..

பெண் : சத்திய நாராயணன் கோயில்
ராமன் சன்னதி காட்டும் திருக்கோயில்
அத்தனையும் அவர் பார்த்த பின்னே
அன்னை அன்னபூரணி விடுவாளா

ஆண் : இமயப் பெருமலை அடிவாரம்
இங்கு இந்துக்கள் வணங்கும் ரிஷிகேஷம்
இமயப் பெருமலை அடிவாரம்
இங்கு இந்துக்கள் வணங்கும் ரிஷிகேஷம்

ஆண் : சமயம் வளர்ந்த இடம் இதுதான்
நம் தத்துவம் நடந்த தடம் இதுதான்
தத்துவம் நடந்த தடம் இதுதான்

பெண் : புத்தன் பிறந்தது நேபாளம்
இந்து புனிதம் அடைந்ததும் நேபாளம்

ஆண் : சத்தியம் பாடுது பூபாளம்
இந்து சமயத்தில் கோயில்கள் ஏராளம்
சத்தியம் பாடுது பூபாளம்
இந்து சமயத்தில் கோயில்கள் ஏராளம்

பெண் : கிருஷ்ண மந்திர் என ஊரறியும்
எங்கள் கேசவன் வாழும் இடம் இதுதான்
உஷ்ணம் தணிந்திட நீரினிலே
அவன் உறக்கம் கொள்ளும் தலம் இதுதான்

இருவர் : ஜலநாராயணன் கோயிலிலே
அவர் தம்மை மறந்தே பணிந்து நின்றார்
ஜலநாராயணன் கோயிலிலே
அவர் தம்மை மறந்தே பணிந்து நின்றார்
குழு : நாராயணா……ஹரிஹரி நாராயணா….

இருவர் : பலமுறை பாதம் பணிந்த பின்னே
அவர் மலைவாழ் கண்ணனை நெருங்குகின்றார்
குழு : நாராயணா… ஹரிஹரி நாராயணா….

இருவர் : ராமஜெயம் ஸ்ரீ கிருஷ்ண ஜெயம்
ஸ்ரீ கிருஷ்ண ஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
குழு : ராமஜெயம் ஸ்ரீ கிருஷ்ண ஜெயம்
ஸ்ரீ கிருஷ்ண ஜெயம் ஸ்ரீ ராமஜெயம்

இருவர் : நாராயணா என நீ விழுந்தால்
அந்த நல்லவன் கைகள் தூக்கி விடும்
நல்லவன் கைகள் தூக்கி விடும்

குழு : ராமஜெயம் ஸ்ரீ கிருஷ்ண ஜெயம்
ஸ்ரீ கிருஷ்ண ஜெயம் ஸ்ரீ ராமஜெயம்……
ராமஜெயம் ஸ்ரீ கிருஷ்ண ஜெயம்
ஸ்ரீ கிருஷ்ண ஜெயம் ஸ்ரீ ராமஜெயம்……
ராமஜெயம் ஸ்ரீ கிருஷ்ண ஜெயம்
ஸ்ரீ கிருஷ்ண ஜெயம் ஸ்ரீ ராமஜெயம்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here